பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் |

தமிழில் 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத காலமாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிவராஜ்குமார் நேற்று முன்தினம் கர்நாடகா திரும்பினார்.
அதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, சிவராஜ்குமாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மீடியாக்களை சந்தித்து சிவராஜ்குமார், ''புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொன்னதும் பயந்துவிட்டேன். ஆனால் ரசிகர்களும், நண்பர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து பக்கபலமாக இருந்தார்கள். இப்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமாகி வருகிறேன். அதனால் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி ரசிகர்களை மகிழ்விப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார்.