பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்புரான்'. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மம்மூட்டி கலந்து கொண்டார்.
அப்போது பிரித்விராஜ் மேடையில் கூறுகையில், " லைகா நிறுவனர் சுபாஸ்கரண் என்னிடம் லைகா நிறுவனத்திற்காக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா ? என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், நான் ஒரு பகுதி நேர இயக்குனர். என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்கான கதையை தயார் செய்ய முடியாது என்பதால் அந்த படம் நடைபெறவில்லை. அதேசமயம் சுபாஸ்கரணுடன் நட்பு தொடர்ந்து இன்று எம்புரான் உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.




