எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
திரைப்பட நடிகர்களில் அபூர்வமாக சிலர் விதிவிலக்காக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் வி.எஸ்.ராகவன். கே.பாலச்சந்தருடன் இணைந்து நாடங்களில் நடித்தும், இயக்கியும், எழுதியும் வந்த ராகவன், 1954ம் ஆண்டு 'வைரமாலை' என்ற படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். இந்த படத்தில் ஆர்.எஸ்.மனோகர் ஹீரோ. ராகவன் நாயகியின் தந்தை.
தனது 29வது வயதில் நடிக்க வந்தவர் முதல் படத்திலேயே அப்பாவாக நடித்தார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ராகவன் பெரும்பாலான படங்களில் அப்பாவாக நடித்தார், பின்னர் தனது கடைசி காலத்திலும், சின்னத்திரை தொடர்களிலும் தாத்தாவாக நடித்தார். கே.பாலச்சந்தரின் படங்களில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள அப்பாவாக நடித்தார்.
நாடகங்களில் முன்பெல்லாம் காட்சி மாறும்போது இரண்டு பேர் வந்து திரைச்சீலையை பக்கவாட்டில் நகர்த்தி செல்வார்கள். அதை மாற்றி திரைச்சிலை மனிதர்கள் உதவியின்றி மேலிருந்து கீழே இறங்குவது போன்று மாற்றி அமைத்தவர் ராகவன். இப்படியான சின்ன சின்ன மாற்றங்களை செய்தவர். தனக்கென்று தனி குரல் வளத்தை வைத்துக் கொண்டவர். அதையே கடைசி வரை பயன்படுத்தினார். இன்னொரு குரலில் அவர் பேசியது இல்லை. மிமிக்ரி கலைஞர்களின் பால பாடமே ராகவன் மாதிரி பேசுவதுதான்.
“நான் எளிய மனிதன் எனது தேவைகள் குறைவு. எனக்கு சொத்துகளும் இல்லை. கடன்களும் இல்லை” என்பார் ராகவன். 2015ம் ஆண்டு இதே நாளில் தனது 89வது வயதில் காலமானார். அவருக்கு இன்று 10வது நினைவு நாள்.