நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், இன்றைய தென்னிந்திய பிரம்மாண்டப் படங்களுக்கான முன்னோடியாக இருந்தவர். அவரைப் பார்த்துதான் பிரம்மாண்டமான படங்களை எடுக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூட கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கடந்த வருடம் தமிழில் வெளியான 'இந்தியன் 2' படமும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படமும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து தோல்விகளையே தராத ஷங்கர் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுத்திருப்பது திரையுலகினரிடமும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்து 'இந்தியன் 3' படம்தான் வெளிவர வேண்டும். அப்படத்திற்கான வேலைகளை 'கேம் சேஞ்ஜர்' வெளியீட்டிற்குப் பிறகு ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுப்பதன் மூலம்தான் ஷங்கர் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரை நம்பி அடுத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.