ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், இன்றைய தென்னிந்திய பிரம்மாண்டப் படங்களுக்கான முன்னோடியாக இருந்தவர். அவரைப் பார்த்துதான் பிரம்மாண்டமான படங்களை எடுக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூட கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கடந்த வருடம் தமிழில் வெளியான 'இந்தியன் 2' படமும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படமும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து தோல்விகளையே தராத ஷங்கர் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுத்திருப்பது திரையுலகினரிடமும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்து 'இந்தியன் 3' படம்தான் வெளிவர வேண்டும். அப்படத்திற்கான வேலைகளை 'கேம் சேஞ்ஜர்' வெளியீட்டிற்குப் பிறகு ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுப்பதன் மூலம்தான் ஷங்கர் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரை நம்பி அடுத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.




