இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், இன்றைய தென்னிந்திய பிரம்மாண்டப் படங்களுக்கான முன்னோடியாக இருந்தவர். அவரைப் பார்த்துதான் பிரம்மாண்டமான படங்களை எடுக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூட கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கடந்த வருடம் தமிழில் வெளியான 'இந்தியன் 2' படமும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படமும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து தோல்விகளையே தராத ஷங்கர் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுத்திருப்பது திரையுலகினரிடமும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்து 'இந்தியன் 3' படம்தான் வெளிவர வேண்டும். அப்படத்திற்கான வேலைகளை 'கேம் சேஞ்ஜர்' வெளியீட்டிற்குப் பிறகு ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுப்பதன் மூலம்தான் ஷங்கர் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரை நம்பி அடுத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.