‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி கூறியதாவது, "கேம் சேஞ்ஜர் படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் அம்மாவின் பெயரும் பார்வதி தான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் என் அம்மாவை நினைவுப்படுத்தியது. கேம் சேஞ்ஜர் என் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.




