'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் சவுந்தர்யா அந்நிகழ்ச்சியிலேயே விஷ்ணுவிடம் லவ் புரொபோஸ் செய்தார். இதை பலரும் ஸ்கிரிப்ட் என சமூக வலைதளங்களில் எழுதி வரும் நிலையில், விஷ்ணு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதிலிருந்து, 'நானும் சவுந்தர்யாவும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னை பிடிக்கும் என நண்பர்கள் மூலம் தெரியும். எனக்கும் அவரை பிடிக்கும். நான் முதலில் புரொபோஸ் செய்தால் எதுவும் நெகட்டிவ் ஆகிவிடக் கூடாது என பயந்தேன். எனவே, ஒரு நண்பனாக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன். அதன்பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. சிலர் இதை ஸ்கிரிப்ட், டிஆர்பி என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஊரறிய ஒரு பையனிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். கொஞ்சநாள் காதலித்துவிட்டு விரைவிலேயே திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறியிருக்கிறார்.