தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து ஜோடியாக நடித்தவர் நடிகை சவுந்தர்யா. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமயத்தில் அரசியல் கட்சி ஒன்றின் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரருடன் தனி விமானத்தில் கிளம்பி சென்றபோது விபத்துக்குள்ளாகி அதிர்ச்சி அளிக்கும் விதமாக மரணமடைந்தார். சவுந்தர்யா அவ்வளவு சிறிய வயதில் இந்த உலகை விட்டு சென்றது அப்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த விமான விபத்தில் நானும் பயணித்திருக்க வேண்டியது என்று புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
மீனாவும், சவுந்தர்யாவும் ஒரே சமயத்தில் முன்னணி நடிகைகளாக நடித்து வந்த நேரத்தில் போட்டி நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்குள் மிகப்பெரிய நட்பு இருந்தது. இதுபற்றி மீனா கூறும்போது, “எங்களுக்குள் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி இருக்கும். சவுந்தர்யா ரொம்பவே திறமையான மற்றும் ஒரு அற்புதமான பெண். அது மட்டுமல்ல என்னுடைய நெருங்கிய தோழியும் கூட. அவரது திடீர் மரணம் கேட்டது என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இப்போது வரை கூட எனக்கு அந்த அதிர்ச்சி விலகாமல் தான் இருக்கிறது.
அவர் அந்தப் பிரச்சாரத்திற்காக பயணித்த அதே விமானத்தில் அன்றைய தினம் நானும் அவருடன் பயணித்து இருக்க வேண்டிய சூழல் அப்போது ஏற்பட்டது. என்னையும் அந்த பிரச்சாரத்திற்கு வரச் சொல்லி அழைத்திருந்தார்கள். ஆனால் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பியதால் எனக்கு அப்போது படப்பிடிப்பு இருப்பதாக கூறி அந்த பயணத்தை தவிர்த்தேன். ஆனால் அந்த பயணம் இப்படி ஒரு அதிர்ச்சியை தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.