விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு ஏற்பட்ட காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
பழம்பெரும் நடிகை பண்டரி பாயை அனைவருக்கும் தெரியும், ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்தவர், பின்னர் எம்ஜிஆருக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர். ஆனால் அவரது தங்கை மைனாவதியை பற்றி அதிகம் தெரியாது. 'மாலையிட்ட மங்கை' படத்தில் 'செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்' பாடலில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஆடியவர்தான் மைனாவதி.
தனது சகோதரி பண்டரிபாயின் நடிப்பை பார்த்து வியந்துபோன மைனாவதி அவரைப்போல புகழ்பெற வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தார். 'சந்தா சாக்கு' எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மைனாவதி, தொடர்ந்து சோதாரி, நானே பகவதி, அனுராதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் 'கண்கள்' படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு மாலையிட்ட மங்கை, பொன்வயல், என் மகள், நல்லவீடு, குலதெய்வம், ஆரவல்லி, பொம்மை கல்யாணம், நான் வளர்த்த தங்கை, அன்பு எங்கே, வண்ணக்கிளி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சில காலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார், பல கன்னட தொடர்களை தயாரிக்கவும் செய்தார். இவரது மகன் ஷியாம் சுந்தர் கன்னட சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருந்தார். அவரது திடீர் மரணம் மைனாவதியை நிலைகுலைய வைத்தது. மகன் இறந்த கவலையிலேயே 2010ம் ஆண்டு தனது 78வது வயதில் பெங்களூருவில் காலமானார்.