நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
ரஜினி நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் அதுவரை ஹீரோவாகவே நடித்து வந்த கார்த்திக் வில்லனாக நடித்தார். அவருடன் ராதிகா, துளசி, விசு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கதைப்படி நல்லவரான ரஜினியிடம், கடனில் மூழ்கி கொண்டிருக்கும் தனது கம்பெனியை ஒப்படைத்து விட்டு இறந்து விடுவார் முதலாளி. ரஜினி அந்த கம்பெனியை கஷ்டப்பட்டு உழைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார். இது கம்பெனி முதலாளியின் மகன் கார்த்திக்கிற்கு பிடிக்காது. அவர் பல வழிகளில் ரஜினிக்கு தொல்லை கொடுப்பார்.
கடைசியில் ரஜினி நல்லவர் என்று கார்த்திக் உணர்வார். அப்போது தன் பெயரில் உள்ள கம்பெனி சொத்துக்களை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது படத்தின் கதை.
ரஜினி, கார்த்தியிடம் சொத்துக்களை கொடுத்து விட்டு தனது மனைவி ராதிகாவின் படத்தை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு செல்வதாக கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டு விட்டது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணனுக்கு இந்த கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை, இந்த கிளைமாக்ஸ் நல்ல உருக்கமாக இருக்கிறது. எல்லோரும் அழுது கொண்டே தியேட்டரை விட்டு வருவார்கள். ரஜினி ரசிகனை நாம் ஏன் அழவைக்க வேண்டும்.
அதனால் கிளைமாக்சை மாற்றுங்கள், ஒரு பெரிய சண்டை காட்சிக்கு பிறகு ரஜினி, கார்த்தியை காப்பாற்றி சொத்துக்களை கொடுத்து விட்டுச் செல்வதாக கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்றார். இதனை எஸ்.பி.முத்துராமன் ரஜினியிடம் சொல்ல 'சூப்பர்... சூப்பர் அப்படியே செய்யலாம்' என்றார்.
இதனால் கார்த்திக்கை வில்லன் கடத்தி சென்று தாக்குவது போன்றும் ரஜினி சண்டைபோட்டு அவரை காப்பாற்றவது போன்றும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு பின்னர் படம் வெளியிடப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது. படம் வெளியான மறுநாள் ரஜினி ஏவிஎம் சரவணனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.