இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் அஜித் தற்போது ஒரே சமயத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார். அதே சமயம் குட் பேட் அக்லி படமும் இன்னொரு பக்கம் முடிந்து விட்டது. அஜித்தின் குடும்பம் தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வீடியோவும் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.