இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ், புலி முருகன் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் கோபி சுந்தர். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இசையமைத்து வருகிறார். குறிப்பாக தற்போது தெலுங்கு திரையுலகில் தான் அதிக படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்தவர். அதன் பிறகு நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியும், பின்னணி பாடகியுமான அம்ருதா சுரேஷ் என்பவர் உடன் சில வருடங்கள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். அடிக்கடி இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாகவே இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தற்போது மயோனி என்கிற பெண்ணுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார் கோபி சுந்தர். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி காதல் மன்னன் என்கிற கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் கோபி சுந்தர்.
சமீபத்தில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள கோபி சுந்தர் கூறும்போது, “பெரும்பாலும் மக்கள் அவர்களது உண்மை முகத்தை மறைக்கவே செய்கிறார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக நடிக்கவும் தங்களை சுருக்கிக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் நான் அதுபோன்று நடிக்க விரும்பவில்லை. நான் நானாகவே வாழ விரும்புகிறேன். என்னை வெட்கம் கெட்ட மனிதன் என்று மற்றவர்கள் அழைத்தால் அதை நான் பெருமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போல உண்மை உன்னை சுதந்திரமாக வாழ வைக்கும். கடவுள் உண்மையையும் நேர்மையும் தான் விரும்புவார். அந்தவகையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னைப் போல வாழ முயற்சி செய்யுங்கள். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதை முழுமையாக வாழ்வோம். மற்றவர்களையும் அவரது வாழ்க்கையை வாழ விடுவோம்” என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.