வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தமிழ் சினிமாவின் முதல் ஆந்தாலஜி படம் 'சிரிக்காதே'. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதும். அதே பாணியில் அடுத்து வந்த படம் 'மணிமாலை'. இதில் 4 காமெடி கதைகள் இடம் பெற்றது. 'ஆஷாடபூபதி' என்ற கதையில் பி.பி.ராகவாச்சாரியும், ஜெயாவும் நடித்திருந்தனர். 'அபூதி அடிககள்' என்ற கதையில் பி.பி.ரங்காச்சாரியும் டி.என்.மீனாட்சியும் நடித்திருந்தனர். 'மைனரின் காதல்' என்ற கதையில் டி.எஸ்.துரைராஜும், கே.எஸ்.ஆதிலட்சுமியும் நடித்திருந்தனர், 'நவீன மார்கண்டேயன்' படத்தல் காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது 'மணிமாலை'.