எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் படங்களை வெளிநாட்டில் வெளியிடும் பிரைடே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராக்டர்'. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர். இது அவரது முதல் திரைப்படம் இது.
படத்தில் நடித்துள்ள நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, சிறுவன் கோவர்தன் உள்ளிட்ட அனைவருமே புதுமுகங்கள். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் யந்த்ரா கூறும்போது “நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான நமது விவசாயத்தை இன்றைய கார்பரேட் நிறுவனங்கள் எப்படி அழிக்கின்றன என்பதை மக்களுக்கு உரக்கச் சொல்ல வரும் இந்த டிராக்டர் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.