32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அதன்படி சிறந்த படமாக 'அமரன்' படத்திற்கு விருது கிடைத்தது. 'மஹாராஜா' படத்தில் நடித்த விஜய்சேதுபதி சிறந்த நடிகராகவும், 'அமரன்' படத்தில் நடித்த சாய் பல்லவி சிறந்த நடிகையாகவும் தேர்வாகி விருதுகள் பெற்றனர். மெய்யழகன்' படத்திற்காக 'மக்களுக்கு பிடித்த நடிகர்' என்ற பிரிவில் விருதை அரவிந்த்சாமி வென்றார்.
'வேட்டையன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. லப்பர் பந்து படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் தினேஷ் வென்றார். 'வாழை' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பொன்வேலுக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விபரங்கள் வருமாறு:
சிறந்த சமூக படம்: லப்பர் பந்து
சிறந்த விழிப்புணர்வு படம் : நந்தன்
சிறந்த படத்திற்கான நடுவர்கள் விருது : ஜமா
சிறந்த படத்திற்கான நடுவர்கள் சிறப்பு விருது : வாழை
சிறந்த இயக்குனருக்கான நடுவர் விருது : பா.ரஞ்சித் (தங்கலான்)
சிறந்த இயக்குனர் : ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : சாய்(அமரன்)
சிறந்த எடிட்டர் : பிலோமின் ராஜ் (மஹாராஜா)
சிறந்த ஒலிப்பதிவாளர் : சூரன், அழகியகூத்தன் (கொட்டுக்காளி)
சிறந்த கலை இயக்குனர்: மூர்த்தி (தங்கலான்)
சிறந்த இசை அமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ் (அமரன்)
சிறந்த மக்கள் விரும்பும் நடிகை : அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த இளம் கலைஞருக்கான அமிதாப்பச்சன் விருது : அருள்நிதி