ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.
புஷ்பா 2 படம் வெளியாகும் முதல்நாளில் நடந்த சிறப்பு காட்சிக்கு தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமினில் விடப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.
பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.