இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அழகே அவரது இரட்டை நாடிதான். கீழ் தாடையில் இருக்கும் அந்த சின்ன பள்ளம்தான் அவரின் அடையாளம். ஆனால் அதுவே ஒரு காலத்தில் அவருக்கு பிரச்சினையாக இருந்துள்ளது.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை 'சதிலீலாவதி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் எல்லீஸ் டங்கன். அதை தொடர்ந்து அவரின் இரு சகோதரர்கள், மீரா, தாசிப்பெண் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். எல்லீஸ் டங்கன், டிஆர் சுந்தரம் இணைந்து 'மந்திரிகுமாரி' படத்தை இயக்கும்போது அதில் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று முடிவானது. அந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதி, எம்ஜிஆர்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் அதற்கு எல்லீஸ் டங்கன் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு இளவரசனுக்குரிய முகலட்சணம் எம்ஜிஆரிடம் இல்லை. குறிப்பாக அவரது கீழ்தாடையில் உள்ள பள்ளம் ராஜா முகத்தக்கு பொருந்தாது என்றார். இதனால் எம்ஜிஆரை மாற்றும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி எம்ஜிஆரின் தாடை பள்ளத்தை மறைக்க சின்னதாக ஒரு தாடி ஒட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார். அதன்படி தாடி ஒட்டிக் கொண்டபிறகு எல்லீஸ் டங்கனுக்கு திருப்தி வந்தது. எம்.ஜி.ஆரும் நடித்தார்.
ஆனால் பிற்காலத்தில் அந்த தாடை பள்ளம்தான் எம்ஜிஆரை மக்கள் ரசித்து போற்றுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. பிற்காலத்தில் எல்லீஸ் டங்கன் பொருளாதார சிக்கலுக்கு ஆளானபோது அந்த காலத்திலேயே லட்சக் கணக்கில் பணம் கொடுத்து காப்பாற்றினார் எம்ஜிஆர். அவரது ஊட்டி எஸ்டேட்டை சிலர் அபகரிக்க முயன்றபோது அதையும் காப்பாற்றிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.