லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அழகே அவரது இரட்டை நாடிதான். கீழ் தாடையில் இருக்கும் அந்த சின்ன பள்ளம்தான் அவரின் அடையாளம். ஆனால் அதுவே ஒரு காலத்தில் அவருக்கு பிரச்சினையாக இருந்துள்ளது.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை 'சதிலீலாவதி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் எல்லீஸ் டங்கன். அதை தொடர்ந்து அவரின் இரு சகோதரர்கள், மீரா, தாசிப்பெண் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். எல்லீஸ் டங்கன், டிஆர் சுந்தரம் இணைந்து 'மந்திரிகுமாரி' படத்தை இயக்கும்போது அதில் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று முடிவானது. அந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதி, எம்ஜிஆர்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் அதற்கு எல்லீஸ் டங்கன் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு இளவரசனுக்குரிய முகலட்சணம் எம்ஜிஆரிடம் இல்லை. குறிப்பாக அவரது கீழ்தாடையில் உள்ள பள்ளம் ராஜா முகத்தக்கு பொருந்தாது என்றார். இதனால் எம்ஜிஆரை மாற்றும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி எம்ஜிஆரின் தாடை பள்ளத்தை மறைக்க சின்னதாக ஒரு தாடி ஒட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார். அதன்படி தாடி ஒட்டிக் கொண்டபிறகு எல்லீஸ் டங்கனுக்கு திருப்தி வந்தது. எம்.ஜி.ஆரும் நடித்தார்.
ஆனால் பிற்காலத்தில் அந்த தாடை பள்ளம்தான் எம்ஜிஆரை மக்கள் ரசித்து போற்றுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. பிற்காலத்தில் எல்லீஸ் டங்கன் பொருளாதார சிக்கலுக்கு ஆளானபோது அந்த காலத்திலேயே லட்சக் கணக்கில் பணம் கொடுத்து காப்பாற்றினார் எம்ஜிஆர். அவரது ஊட்டி எஸ்டேட்டை சிலர் அபகரிக்க முயன்றபோது அதையும் காப்பாற்றிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.