பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக சொத்து விவகாரத்தில் தகராறு நடந்து வருகிறது. கடந்த வாரம் அவரது ஹைதராபாத் வீட்டில் டிவி நிருபர் ஒருவரை கடுமையாகத் தாக்கினார் மோகன்பாபு. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு உடல்நலம் சரியில்லை என, நீதிமன்றத்தை அணுகி டிசம்பர் 24 வரை அனுமதி வாங்கியுள்ளார் மோகன்பாபு. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த டிவி நிருபரை சந்தித்துப் பேசியுள்ளார் மோகன்பாபு.
இந்நிலையில் ரச்சகொன்டா போலீஸ் கமிஷனர் சுதீர் பாபு, நடிகர் மோகன்பாபுவுக்கு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 24ம் தேதி வரையில்தான் அவர் அனுமதி கேட்டுள்ளார். நீதிமன்றமும் அதை வழங்கியுள்ளது. அதற்குப் பிறகு அவர் ஒத்துழைக்க மறுத்தால் அவரைக் கைது செய்யவும் தயங்க மாட்டோம். சட்டப்படி அவர் ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு வரும் போது மருத்துவச் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.