பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான, விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதனால் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை என்றும், படப்பிடிப்புக்கு அனுமதி கேட்கவே புதுச்சேரி சென்றேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் விக்னேஷ்சிவன்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛நான் தற்போது இயக்கி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான உரிய அனுமதி பெறுவதற்காக புதுச்சேரிக்கு சென்றேன். அந்த வகையில் புதுச்சேரி முதல் அமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தேன். நான் அவர்களை சந்தித்துவிட்டு வந்த பின்பு என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவர்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த விஷயங்கள் எனக்காக கேட்கப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதனை பரப்பி விட்டார்கள்.
அரசு ஓட்டலை நான் விலை பேசியதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இது ரசிக்கும்படியாக இருந்தாலும் இதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் இது போன்ற மீம்ஸ்கள் தேவையில்லாதது என்று நினைக்கிறேன். எனவேதான் இந்த விவகாரத்தில் எனது விளக்கத்தை தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.