32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
80,90 காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் பி. வாசு. இவரின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரிதளவில் அவர் கதாநாயகனாக வெற்றி பெறவில்லை.
அதன்பிறகு சிவலிங்கா, ஏழு நாட்கள் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் சக்தி நடிக்கிறார். படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.