26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

80,90 காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் பி. வாசு. இவரின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரிதளவில் அவர் கதாநாயகனாக வெற்றி பெறவில்லை.
அதன்பிறகு சிவலிங்கா, ஏழு நாட்கள் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் சக்தி நடிக்கிறார். படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.




