என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடி, இரண்டாம் நாளில் 449 கோடி, மூன்றாம் நாளில் 621 கோடியாக வசூலித்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தின் வசூல் உயர்ந்து அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது பட நிறுவனம். அது மட்டுமல்ல இரண்டரை நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்று திங்கள் கிழமை வார நாளின் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பி இருக்கிறது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைத் தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களின் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.