Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜி

09 டிச, 2024 - 01:11 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Sivaji-acted-in-the-story-Rajinikanth-wanted


ரஜினிக்கு எப்போதுமே நாடகங்கள் பிடிக்கும், புதிதாக யார் நாடகம் போட்டாலும் மாறுவேஷத்தில் சென்று பார்த்து விடுவார். அப்படி அவர் பார்த்து வியந்த நாடகம்தான் 'கீழ்வானம் சிவக்கும்'. விசு மற்றும் அவரின் சகோதரர்கள் கிஷ்மு, ராஜாமணி ஆகியோர் நடத்தி வந்த நாடகம் அது. நாடகம் முடிந்ததும் விசுவிடம் பேசிய ரஜினி, “கீழ்வானம் சிவக்கும் நாடகத்தை நாம் சினிமாவாக பண்ணலாம். அதில் அப்பா, மகன் இரண்டு கேரக்டரிலும் நானே நடிக்கிறேன்” என்றார். விசுவும் ஒப்புக் கொண்டார்.

அதன்பிறகு அதே நாடகத்தை சிவாஜியும் பார்த்தார். அவரும் அந்த நாடகத்தை திரைப்படமாக்க விரும்பியபோது விசுவால் எதுவும் செய்ய முடியவில்லை. இதை அவர் ரஜினியிடம் சொன்னபோது “ரொம்ப சரியான சாய்ஸ். சிவாஜி சார் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறிவிட்டார்.

படத்தின் கதை இதுதான். மருத்துவரான சிவாஜி அன்பானவர், அமைதியானவர், ஒரு நாள் கண்பார்வையற்ற ஜெய்சங்கர் சிவாஜியிடம் வந்து எனக்கு எப்படியாவது கண்பார்வை கொடுங்கள் டாக்டர் என் தங்கையை(மேனகா) கற்பழித்து கொன்றவனை பழிவாங்க வேண்டும் என்கிறார். தங்கையை கெடுத்தவனின் படத்தை சிவாஜியிடம் காட்டுகிறார். அது சிவாஜியின் மகன் சரத்பாபு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

உண்மையை மறைக்க சிவாஜி முயற்சிப்பதும், அதை வெளியில் கொண்டுவர அவரது மருமகள் சரிதா போராடுவதும்தான் திரைக்கதை. இருவர் பேசும் வசனங்கள் விசுவின் பேனாவில் இருந்து நெருப்பு மாதிரி எழுதப்பட்டிருக்கும். படம் 1981 தீபாவளியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல்புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி ... விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல் விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)