Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

09 டிச, 2024 - 01:17 IST
எழுத்தின் அளவு:
I-will-put-sugar-in-Vijays-mouth!-Actress-Kasthuri-reveals-sensational-information


சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்களுக்கு எதிராக பேசியதால் அதையடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த கஸ்தூரி சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்தை முன்வைத்து ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ''2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கணக்கு மைனஸ் ஆகிவிடும் என்று விஜய் கூறியிருப்பது மட்டும் உண்மையானால் அவரது வாயில் நான் சர்க்கரை போடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ''திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் அங்கிருந்து வெளியே வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் திருமாவளவன் அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இருவரும் இனிமேல் விடுதலை சிறுத்தை கட்சியில் தொடர்ந்து பயணிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

மேலும் உதயநிதி ஸ்டாலின், விஜய் சொன்ன கருத்துக்களை சினிமா செய்தியாக நான் பார்க்கிறேன் என்று கூறுகிறார். அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன். உதயநிதி அவர்கள் தரக்குறைவாக பேசுவது என்பது புதிய விஷயமல்ல. அவர் இன்றைக்கு விஜய்யையும், ஆதம் அர்ஜுனாவையும் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பு இந்து சனாதனத்தை பற்றி அப்படி பேசினார். அதற்கு முன்பு ரஜினியை சொன்னார். இதுபோன்று அவர் அடிக்கடி மற்றவர்களை தரக்குறைவாக பேசுகிறார். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,'' என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜிபிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் ... சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் எகிறியது! சிவகார்த்திகேயன் 25வது படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

09 டிச, 2024 - 10:12 Report Abuse
NellaiBaskar தைரியமாக பேசுவதற்கே உங்களை பாராட்டலாம். இரு திராவிட கட்சிகள் இல்லாமல் புதிய ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)