ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஏ ஐ என்ற டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகைகளின் ஆபாச டீப் பேக் வீடியோக்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சமந்தா மற்றும் சில பாலிவுட் நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தெலுங்கு நடிகையை பிரக்யா நாக்ராவின் டீப் பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அது குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. வக்கிரம் பிடித்த சிலர் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இது போன்ற டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி பல நடிகைகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாத வகையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,' என அந்த பதிவில் தெரிவித்துள்ள பிரக்யா நாக்ரா, ‛அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று எனக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்களுக்கு நன்றி' எனவும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். தெலுங்கு நடிகையான இந்த பிரக்யா நாக்ரா, வரலாறு முக்கியம், நதிகளில் சுந்தரி யமுனா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.