பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேஜிஎப், காந்தாரா போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்து வழங்கவிருக்கும் பான் இந்தியா படம் “மஹாவதார் நரசிம்மா” . விஷ்ணுவின் அவதாரங்களை தனித்தனி அனிமேஷன் படமாக தயாரிக்கும் திட்டத்தின் கீழ் முதல் படமாக இந்த படம் வெளிவருகிறது.
இந்தப் படத்தின் கதை, இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. அவர் தனது தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். என்பதுதான் படத்தின் கதை.
வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யுஏ 'சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு புராண படத்திற்கு அதுவும் அனிமேஷன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். படத்தின் நாயகன் பிரஹலாதன் சோகத்துடன் யுஏ சான்றிதழை சுமந்து நிற்பது போன்ற படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.