என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் புஷ்பா- 2 படத்தின் சிறப்பு காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற ஒரு ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் . அவருடைய மகன் தேஜ் என்பவர் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகை உயிரிழந்திருப்பது படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். அதோடு புஷ்பா -2 பட குழுவினர் ரேவதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய தயாராக உள்ளார்கள். விரைவில் அவரது குடும்பத்தாரை நேரில் சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.