ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். தற்போது நகைச்சுவை கலந்த குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். இதுதவிர அரசியலிலும் அவ்வப்போது பயணிக்கிறார். இவரது மகன் துக்ளக் அலிகான், ‛கடமான் பாறை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதை மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்தார்.
கடந்தவாரம் சென்னையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் போனில் துக்ளக் அலிகானின் நம்பரும் இருந்தது. இதை வைத்து இவர்களுக்குள் என்ன தொடர்பு என துக்ளக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் துக்ளக் அலிகானையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் துக்ளக் உள்ளிட்ட கைதான நபர்களை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி துக்ளக் அலிகான் உள்ளிட்ட 7 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.