32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியும், நிவாரண உதவிகள் வழங்கியும் வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர் விஜய் நேற்று அவருடைய கட்சி அலுவலகத்தில் செய்த உதவி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு 250 குடும்பத்தினரை தனது கட்சி அலுவலகம் இருக்கும் இடமான பனையூருக்கு வரவழைத்து அங்கு அவர்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் விஜய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி வழங்காமல் இப்படி வீட்டிலிருந்தே உதவி வழங்கி வருவதை மீம்ஸ் போட்டும் பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
அரசியலை சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செய்வதை வழக்கமாக வைத்திருக்க, விஜய், 'வொர்க் பிரம் ஹோம்' பாணியில் அரசியல் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால், விஜய் ஏதாவது ஒரு இடத்திற்கு விரைவில் நேரில் செல்ல வாய்ப்புள்ளது. அதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.