ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
1980களில் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்தது. ஹிந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா ஆனது. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்தார். இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.
தமிழில் 'ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட பல படங்கள் தயாரானது. தற்போது மீண்டும் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. "சில்க் ஸ்மிதா: குயின் ஆப் தி சவுத்" என்ற பெயரில் எஸ்டிஆர்ஐ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்குகிறார். விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.