மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் 'புஷ்பா 2' படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 'ஸ்பெஷல் பிரிமியர் ஷோ' என்ற பெயரில் 4ம் தேதி (நாளை இரவு) 9 மணிக்கு முக்கியமான மால் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஷோவிற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் 5ம் தேதி 450 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்கிறது. ஸ்பெஷல் காட்சிக்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.