என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் 'புஷ்பா 2' படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 'ஸ்பெஷல் பிரிமியர் ஷோ' என்ற பெயரில் 4ம் தேதி (நாளை இரவு) 9 மணிக்கு முக்கியமான மால் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஷோவிற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் 5ம் தேதி 450 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்கிறது. ஸ்பெஷல் காட்சிக்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.