ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

இந்தியாவின் முதல் பார்முலா 1 மோட்டார் பந்தய வீரரான கோயம்பத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் படம் உருவாக உள்ளது. தமிழில் உருவாக உள்ள இந்தப் படத்தை 'டேக் ஆப், மாலிக்' ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். 'சூரரைப் போற்று' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஷாலினி உஷாதேவி இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதுகிறார்.
நரேனின் சிறு வயது முதல் அவரது படிப்படியான வளர்ச்சியைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாம். இந்த பயோபிக் படம் குறித்து நரேன் கார்த்திகேயனும் அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளாராம். 'என்கே 370' என்ற தற்காலிக தலைப்புடன் இந்தப் படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள்.
“நரேன் கார்த்திகேயன், பயணம் என்பது ரேஸிங் மட்டுமல்ல. அது நம்பிக்கையைப் பற்றியது. உங்களை நீங்களே, உங்கள் நாட்டைப் பற்றியும், மற்றும் வேறு யாராலும் காண முடியாத ஒரு கனவு. அதுதான் என்னை இந்த கதைக்குள் இழுத்து வந்தது,” என படம் பற்றி இயக்குனர் மகேஷ் தெரிவித்துள்ளார்.




