தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
இந்தியாவின் முதல் பார்முலா 1 மோட்டார் பந்தய வீரரான கோயம்பத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் படம் உருவாக உள்ளது. தமிழில் உருவாக உள்ள இந்தப் படத்தை 'டேக் ஆப், மாலிக்' ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். 'சூரரைப் போற்று' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஷாலினி உஷாதேவி இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதுகிறார்.
நரேனின் சிறு வயது முதல் அவரது படிப்படியான வளர்ச்சியைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாம். இந்த பயோபிக் படம் குறித்து நரேன் கார்த்திகேயனும் அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளாராம். 'என்கே 370' என்ற தற்காலிக தலைப்புடன் இந்தப் படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள்.
“நரேன் கார்த்திகேயன், பயணம் என்பது ரேஸிங் மட்டுமல்ல. அது நம்பிக்கையைப் பற்றியது. உங்களை நீங்களே, உங்கள் நாட்டைப் பற்றியும், மற்றும் வேறு யாராலும் காண முடியாத ஒரு கனவு. அதுதான் என்னை இந்த கதைக்குள் இழுத்து வந்தது,” என படம் பற்றி இயக்குனர் மகேஷ் தெரிவித்துள்ளார்.