இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2' டிசம்பர் 5ம் தேதியன்று பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கானா மாநிலத்திற்கான கட்டணத் தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 4ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணத்தை ரூ.800 என நிர்ணயித்துள்ளார்கள்.
படம் வெளியாகும் தினமான டிசம்பர் 5ம் தேதிக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கும், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிக்கான இரண்டு கூடுதல் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.
சிங்கிள் தியேட்டர்களில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.150ம், 9ம் தேதி முதல் 16ம் தேதிவரை ரூ.105ம், 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை ரூ.20 உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.200ம், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.150ம், 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரூ.50ம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனி.
தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு என்ன அரசாணை வெளியிடப் போகிறது என திரையுலகினர் காத்திருக்கிறார்கள். ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையிலான மறைமுகமான மோதல் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.