300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த இரண்டு நாட்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்து மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. நயன்தாராவின் திருமண வீடியோ இன்று டாக்குமென்டரி படமாக நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தனுஷை அணுகியதாகவும் இரண்டு வருடமாக அதை தள்ளி போட்டு வந்த தனுஷ், அனுமதி மறுத்துவிட்டதாகவும் நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டுமல்ல தனுஷ் பற்றி தனிப்பட்ட முறையிலும் பல விமர்சனங்களை கடுமையாக முன் வைத்தார் நயன்தாரா.
இந்த நிலையில் இது போதாது என்று அடுத்ததாக போஸ்டர் மூலம் இன்னொரு தாக்குதலையும் தொடுத்துள்ளார் நயன்தாரா. அவர் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் 'ராக்காயி' என்கிற படத்தின் டைட்டில் போஸ்டர் என்று வெளியாகி உள்ளது. செந்தில் நல்லசாமி என்பவர் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாவதை அறிவிக்கும் விதமாக நேற்று அதற்கு ஒரு புரோமோ போஸ்டர் ஒன்றும் வெளியானது அதில் நயன்தாரா அமர்ந்திருப்பது போன்றும் அந்த போஸ்டரில் 'அவள் போரை அறிவித்து விட்டாள்' என்கிற கேப்சன் வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தன. அது மட்டுமல்ல அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்ட நயன்தாரா 'மிருகங்களுக்கு இடையேயான போர்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
படத்தின் கதைக்கும் அவரது கதாபாத்திரத்திற்கும் இவை பொருத்தமான வார்த்தைகள் தான் என்றாலும் தனுஷுக்கும் அவருக்கும் இடையான இந்த பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இப்படி ஒரு போஸ்டர் மூலம் நயன்தாரா எரிகிற தீயில் தேவையில்லாமல் எண்ணெயை தான் ஊற்றி உள்ளார் என்றே தெரிகிறது