காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள கக்குவா படம் ஏகப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு இந்தியா முழுக்க புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சூர்யா. அப்போது அவர் பேசியது மட்டுமின்றி அப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் அப்படம் குறித்து வெளியிட்ட பில்டப் செய்திகள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மிகப்பெரிய அப்செட்டில் இருந்து வருகிறார் சூர்யா.
இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்திருக்கும் சூர்யா, அவருக்கு தனது சார்பில் சில அட்வைஸ்களை கொடுத்துள்ளார். குறிப்பாக படத்தில் காண்பிக்கும் காட்சிகளை மட்டுமே டிரைலரில் இடம்பெறச் செய்ய வேண்டும். படம் எப்படி இருக்கிறதோ அந்த விஷயங்களை முன் வைத்தே புரமோஷனில் ஈடுபட வேண்டும். எக்காரணம் கொண்டும் மிகப் பெரிய அளவுக்கு பில்டப் செய்திகளை வெளியிட வேண்டாம். அப்படி செய்தால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து விடுகிறது என்று கூறியுள்ளார் சூர்யா. அதன் காரணமாகவே சூர்யா 44வது படம் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரைக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள்.