கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வல் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அஞ்சான் வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. இந்த படத்தின் மூலம் தோல்வி முகத்திற்கு சென்ற லிங்குசாமி இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை.
சமீபகாலமாக லிங்குசாமி ‛அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் திட்டம் இருப்பதாக தெரிவித்து வந்தார். விமர்சிக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை மாற்றியும் இந்த படத்தை மறு வெளியீடு செய்கின்றனர். இந்த இந்த நிலையில் அஞ்சான் படம் நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.