அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்தையே வெற்றி படமாக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் உருவான படம் ‛நரகாசுரன்'. 2017ல் உருவான இந்தப்படம் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் 7 ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான ‛மாபியா, மாறன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின் இவர் இயக்கத்தில் உருவான படம் ' நிறங்கள் மூன்று'. இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022ல் இந்த படம் துவங்கி கடந்தாண்டே ரிலீஸிற்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்னைகளை தீர்த்து ஒருவழியாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 22ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.