டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்தையே வெற்றி படமாக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் உருவான படம் ‛நரகாசுரன்'. 2017ல் உருவான இந்தப்படம் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் 7 ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான ‛மாபியா, மாறன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின் இவர் இயக்கத்தில் உருவான படம் ' நிறங்கள் மூன்று'. இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022ல் இந்த படம் துவங்கி கடந்தாண்டே ரிலீஸிற்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்னைகளை தீர்த்து ஒருவழியாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 22ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.




