‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் என்றாலும் தனது நடிப்புத் திறமையால் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு அப்படியே பாலிவுட் வரை தன் எல்லையை விரிவு செய்து விட்ட துல்கர் சல்மான் எல்லா மொழிகளிலும் வருடத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஒரு படம் தோல்வி அடைகிறது என்றால் அது என்னுடைய பொறுப்பு தான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'கிங் ஆப் கொத்த' என்கிற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறி அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் துல்கர் சல்மான் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் மலையாளத்தில் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அந்த படத்திற்கான தோல்விக்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியுள்ள துல்கர் சல்மான் அந்தப் படத்தின் இயக்குனராக அறிமுகமாகிய தனது நண்பர் அபிலாஷ் ஜோஷி திறமையானவர் என்றும், இன்னொரு படத்தின் மூலம் அவர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.