இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் ஆன்மிகப் பற்று கொண்டவர்கள். மற்ற மதத்தைச் சார்ந்த நடிகைகள் கூட இந்து மதக் கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, சமந்தா ஆகியோர் அதற்கு உதாரணம்.
'சீதா ராமம், குஷி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜக்தேஷ்வர் என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாதளத்தில் பதிவிட்டுள்ளார்.'ஆனந்தம்' என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்தப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பக்திமயமான புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளது. நடிகையரின் ஆடை, அலங்கார புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் லைக் செய்வதில்லை, அவர்களது ஆன்மிக புகைப்படங்களுக்கும் லைக் செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.