''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் ஆன்மிகப் பற்று கொண்டவர்கள். மற்ற மதத்தைச் சார்ந்த நடிகைகள் கூட இந்து மதக் கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, சமந்தா ஆகியோர் அதற்கு உதாரணம்.
'சீதா ராமம், குஷி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜக்தேஷ்வர் என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாதளத்தில் பதிவிட்டுள்ளார்.'ஆனந்தம்' என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்தப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பக்திமயமான புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளது. நடிகையரின் ஆடை, அலங்கார புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் லைக் செய்வதில்லை, அவர்களது ஆன்மிக புகைப்படங்களுக்கும் லைக் செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.