ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‛இட்லி கடை' என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படங்களிலும் நடித்து வருகிறார்.
கைவசமுள்ள இந்த படங்களை எல்லாம் முடித்ததும் மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்கப் போகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியம் வேடத்திலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தொடரி என்ற படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.