டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‛இட்லி கடை' என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படங்களிலும் நடித்து வருகிறார்.
கைவசமுள்ள இந்த படங்களை எல்லாம் முடித்ததும் மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்கப் போகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியம் வேடத்திலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தொடரி என்ற படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




