பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே. சூர்யா தற்போது மலையாள மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் உடன் இணைந்து ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என அவரே ஒரு சில நேர்காணலில் தெரிவித்தார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ். ஜே. சூர்யா. அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.