ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே. சூர்யா தற்போது மலையாள மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் உடன் இணைந்து ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என அவரே ஒரு சில நேர்காணலில் தெரிவித்தார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ். ஜே. சூர்யா. அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.