டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மாநகரம் என்ற படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் . அப்போது அவரிடத்தில், வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு...
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.




