வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தமிழில் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரயாகா மார்ட்டின். தொடர்ந்து மலையாள படங்களில் பிசியான கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் என்பவர் போதை பொருள் மற்றும் மது கடத்திய குற்றத்திற்காக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கே தங்கியிருந்த நாட்களில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அங்கு நடந்த பார்ட்டி ஒன்றில் நடிகை பிரயாகா மார்ட்டின் மற்றும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஆகியோர் கலந்து கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் போலீசார் இவர்கள் இருவரையும் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியானதால் மலையாள திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரயாகா மார்ட்டின், “அன்று நான் அந்த ஹோட்டலுக்கு சென்றது உண்மை. அங்கே பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் அது என்னுடைய நண்பர்கள் என்னை அழைத்திருந்த பார்ட்டி. அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிவிட்டு அதன்பிறகு சில மணி நேரங்களில் நான் வந்தே பாரத் ரயிலைப் பிடித்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் நண்பர்களின் அறையிலேயே இரண்டு மணி நேரம் தங்கியிருந்து விட்டு கிளம்பினேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக இப்படி ஒரு நபர் அந்த ஹோட்டலில் அப்போது இருந்தார் என்பது எனக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் என்னிடம் இது பற்றிய பேட்டி வேண்டும் என மீடியாக்கள் கேட்டபோதுதான் சம்பந்தப்பட்ட அந்த தாதாவின் பெயரையே நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் இதுதான் உண்மையாக நடந்தது” என்று கூறியுள்ளார்.




