'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை (அக்-10) வெளியாக இருக்கிறது. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதுடன் 30 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வைத்த பெருமையும் பெற்றுள்ளார் இயக்குநர் ஞானவேல்.
சில நாட்களாக தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கான நடிப்பு ஒப்பீடு குறித்து நகைச்சுவையாக பேசினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “நடிகர் அமிதாப் பச்சனை பொறுத்தவரை அவர் ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் போல. முதல் நாளே அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான பேப்பர்களை வாங்கிக் கொண்டு அதற்காக பக்காவாக தயாராகி வந்து மறுநாள் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அப்படியே அழகாக கேமரா முன் செய்து விட்டு போவார். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் போல.. ரிகர்சல் எல்லாம் பார்க்க மாட்டார். ஷாட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் தனக்கான வசன பேப்பர்களை வாங்கி பார்ப்பார். பின் அவர் அதை மனதில் உள்வாங்கி தனது பாணியில் நடிப்பாக வெளிப்படுத்தும்போது அதில் ஒரு மேஜிக்கே நடக்கும்” என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.