முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 13ம் தேதி வரை மைசூரு நகரில் நடைபெறுகிறது. அதன் கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'யுவ தசரா' என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதில் நாளை அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, யுவதசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரு தசரா விழாவில் சாமுண்டீஸ்வரி அனுக்கிரகத்தில், முதல் முறையாக நவராத்திரி விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.