ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இதன் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர் பிரபு மற்றும் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இதன் கிளை நிறுவனமாக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்கிற இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி 'மாயா, மாநகரம், மான்ஸ்டர், இறுதிச்சுற்று என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பொடென்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசும்போது “இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த 'பிளாக்' படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்.