அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இதன் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர் பிரபு மற்றும் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இதன் கிளை நிறுவனமாக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்கிற இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி 'மாயா, மாநகரம், மான்ஸ்டர், இறுதிச்சுற்று என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பொடென்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசும்போது “இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த 'பிளாக்' படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்.