ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
கன்னட திரையுலகில் கடந்த மாதம் ‛சூ ப்ரம் சோ' என்கிற படம் வெளியானது. ஜே.பி துமிநாடு என்பவர் இயக்கிய இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆறு கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் வெளியான 25 நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இதன் ரீமேக் உரிமை குறித்து மற்ற மொழிகளில் இருந்து பார்வையை திருப்பி உள்ளனர். தமிழில் இதன் ரீமேக் உரிமை ஏற்கனவே வாங்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்குவதற்காக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் காய் நகர்த்தி வருகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் ஜே.பி துமிநாடுவை தொடர்பு கொண்டு பேசிய அஜய் தேவ்கன் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்காக பக்காவான முழு ஸ்கிரிப்ட்டுடன் தன்னை வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாகவே சீரியசான ஆக்சன் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அஜய் தேவ்கன், ஹாரர் காமெடி படமான ‛சூ ப்ரம் சோ' படத்தை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவதும் இன்னொரு ஆச்சரியமான விஷயம் தான்.