இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகர் விஜய் தனது 69வது படத்தை முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இந்த அரசியல் வருகை குறித்து நவரச நாயகன் கார்த்திக் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனால் தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் என்னை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். காரணம் தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தினால் அது எளிதில் மக்களை போய் சேரும். அதனால் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது கருத்து,'' என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்திக்.