லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், சமூக வலைத்தளங்களில் மட்டுமே தற்போது அரசியல் நடத்தி வருகிறார். வாழ்த்துகள் சொல்வது, இரங்கல் சொல்வது என கடந்த ஒரு வருட காலமாகவே அதைத் தவறாமல் செய்து வருகிறார். அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள அவரது கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகுதான் விஜய் தீவிர கள அரசியலில் இறங்குவாரா என்பது தெரியும்.
முன்னாள் நடிகர், தயாரிப்பாளராக இருந்த உதயநிதி, விளையாட்டுத் துறை அமைச்சராகி தற்போது துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் என தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலிருந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக்கழகத் தலைவரான விஜய் அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் ஒரு நடிகராவது வாழ்த்துகளைச் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் அவர் எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி நேற்று பதிவிட்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் வெற்றி பெற்ற நடிகர் பவன் கல்யாணுக்குக் கூட வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்தநாள் மே மாதம் வந்த போது வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு முன்பு மார்ச் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது உதயநிதி துணை முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.