'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'தேவரா 1' படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என தயாரிப்பி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு நேற்று கிடைத்தது. இந்நிலையில் 172 கோடி வசூல் என்பது அதிகமில்லையா என தெலுங்கு ரசிகர்களே கமெண்ட் பகுதியில் கேட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் வசூலாக 191 கோடி வசூலித்தது என்று அறிவித்திருந்தார்கள். 'தேவரா 1' படத்தை விடவும் அப்படம் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஹிந்தியில் அப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விடவும் சுமார் 19 கோடி மட்டுமே குறைவான வசூல் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தான் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருவதாகத் தெரிகிறது.
வசூல் வேட்டை என்பதை விட வசூல் விளையாட்டு என்பதுதான் இந்தக் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக அறிவிக்கப்படுகிறது.