மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர், சிவா சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு முன்பே நடிகராக மாறியவர். அதன்பின் மலையாள திரை உலகம் சென்று அங்கே தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை உள்ளது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு தற்போது எலிசபெத் என்கிற டாக்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா.
இருந்தாலும் தன்னுடைய பேட்டிகளில் தன்னுடைய மகள் அவந்திகாவை தன்னால் மறக்கவில்லை என்றும் அவள் மீது பாசம் செலுத்த முடியவில்லை என ஏங்குவதாகவும் அவ்வப்போது கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாலாவின் மகள் அவந்திகா சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் கூறும்போது, “என்னுடைய தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக பல பேட்டிகளில் கூறி வருகிறார். என்னை நிறையவே மிஸ் பண்ணுவதாக கூறுகிறார். எனக்கு நிறைய பரிசுகள் வாங்கியதாக சொல்கிறார். ஆனால் இது எதிலும் உண்மை இல்லை. நான் என் தந்தையை நேசிக்க என்னிடம் ஒரு சின்ன காரணம் கூட இல்லை. அந்த அளவிற்கு அவர் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் டார்ச்சர் செய்திருக்கிறார். சிறுவயதில் ஒருநாள் இரவு அவர் குடித்துவிட்டு வந்து என் தாயை அடித்தது இன்னும் என் கண் முன்னே இருக்கிறது. அந்த நேரத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியாத உதவி இல்லாத நிலையில் நான் இருந்ததை இப்போதும் என்னால் உணர முடிகிறது. என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். அதனால் என்னுடைய தந்தையின் குறுக்கீடு எனது வாழ்க்கையில் இருப்பதை விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
மகளின் இந்த வீடியோ பதிவால் அதிர்ச்சியான பாலா இதற்கு பதில் அளிக்கும் விதமாக கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் உன்னுடன் விவாதம் பண்ண விரும்பவில்லை பாப்பு. இன்று என்னுடைய வாழ்க்கையில் எப்போதையும் விட அதிக வலியை உணர்ந்தேன்.. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஒருபோதும் உன் அருகில் நான் வரமாட்டேன். கடவுள் மீது சத்தியம். நீ ஐந்து வயது கருவாக இருந்த சமயத்தில் இருந்தே உனக்கு அவந்திகா என பெயரிட்டு மகிழ்ந்தவன் உன்னுடைய தந்தை. நீ எப்போதும் எனக்கு குழந்தை தான்” என்று உருக்கமாக கூறியுள்ளார் பாலா.