பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் தர்மேந்திரா மற்றும் மீனாகுமாரி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற “பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்திப் திரைப்படம் சென்னையில் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து கொண்டிருந்தது. திருட்டுத் தொழிலை பிரதானமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வரும் திருடன் ஒருவனை, வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் வாழ்ந்து வரும் ஒரு இளம் விதவைப் பெண்ணிற்கு அவனை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கல்மனம் படைத்த அந்த திருடனின் இதயத்தை மலர் போல மென்மையாக்கி அவன் வாழ்க்கையை நெறிபடுத்தி, அவளையே அவன் மணமுடிப்பது போல் அமைந்தது.
இந்த திரைப்படத்தை பார்த்த நடிகை சவுகார் ஜானகி, மீனாகுமாரியின் நடிப்பைப் பார்த்து வியந்ததோடு, தமிழில் இந்தப் படத்தை யார் எடுத்தாலும் அதில் மீனாகுமாரியின் விதவை கதாபாத்திரத்தை எப்படியாவது கேட்டு வாங்கி நடித்து விடவேண்டும் என்ற ஆவலும் அவரை தொற்றிக் கொண்டது.
ஜெமினி நிறுவனம் “பூல் அவுர் பத்தர்” ஹிந்தி திரைப்படத்தை தமிழில் தயாரிக்க திட்டமிட்டது. விபரம் அறிந்த சவுகார் ஜானகி, ஜெமினி எஸ்எஸ் பாலனை அணுகி, படத்தில் வரும் மீனாகுமாரியின் வேடத்தில் நடிக்கும் தனது விருப்பத்தை தெரிவித்தார். எம்ஜிஆரின் ஒப்புதலோடு அந்த வேடம் சவுகாருக்கு வழங்கப்பட்டது.
எம்ஜிஆரின் 100வது திரைப்படமாக “ஒளி விளக்கு” என்ற பெயரில் வெளிவந்தது அத்திரைப்படம். திருடனாக எம்ஜிஆரும், இளம் விதவையாக சவுகார் ஜானகியும் நடித்தனர். இந்தபடத்தில், எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா ஒரு நடன மங்கை வேடத்தில் நடித்தார். ஹிந்தி திரைப்படத்தில் வருவதுபோல் அந்த இளம் விதவை கதாபாத்திரத்தை நாயகன் மணமுடிப்பது போல் தமிழில் எடுத்தால் அதை எம்ஜிஆர் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என எண்ணி, அந்த கதாபாத்திரத்தை நாயகனின் சகோதரியாக்கி முடிவில் மரணம் அடைவது போல் எடுத்திருப்பர்.
எம்ஜிஆரின் 100வது படம், ஜெமினி நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே திரைப்படம், ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைப்படம் என்ற பெருமைகளோடு வெளிவந்த இத்திரைப்படத்தில் சவுகார் ஜானகியின் நடிப்பு அற்புதமாக அமைந்து படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.
மேலும் எம்ஜிஆர் தமிழக முதல்வரான பின்பு 1984ல் உடல் நலமின்றி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அங்குள்ள ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் நலம்பெற வேண்டி இத்திரைப்படத்தில் சவுகார் ஜானகி பாடுவதுபோல் வரும் “ஆண்டவனே உன் பாதங்களை” என்று ஆரம்பமாகும் பாடலை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கச் செய்து, எம்ஜிஆர் பூரண நலம் பெற்று மீண்டும் முதல்வராக நல்லாட்சி செய்ய வழிவகுத்த வரலாற்று சிறப்பு மிக்க பாடல் காட்சியில் நடித்த பெருமைக்கும் உரியவரானார் நடிகை சவுகார் ஜானகி.